விதி மீறிய தி.நகர் கடைகளை மேலும் 8 வாரம் திறந்து வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகளைத் திறந்து வைப்பதற்கான அனுமதியை மேலும் 8 வார காலத்துக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து என்று 2007-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் புதிய திருப்பமாக அனுமதியின்றி கட்டப்பட்ட 25 கட்டிடங்களை முதல் கட்டமாக இடிக்க கடந்த் நவம்பரில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தி.நகர் ரங்கநாதன் தெருவில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்த 25 கட்டிடங்கள் நவம்பரில் சீல் வைக்கப்பட்டன.
இதனை அகற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வியாபாரிகள் மேல்முறையீடு செய்தனர். இதில் பொங்கல் உள்ளிட்ட பண்டிக்கைக்காக கடைகளை 6 வாரம் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த அனுமதியை மேலும் 8 வார காலத்துக்கு நீட்டித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோகன் குழு
விதிமீறிய கட்டிடங்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டிருந்த மோகன் குழு, 2007-ம் ஆண்டுக்கு முன்பு விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை நிபந்தனையுடன் இயங்க அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மோகன் குழுவின் பரிந்துரைகளை பரிசீலிக்க தமிழக அரசுக்கு 6 வார காலம் அவகாசம் அளிப்பதாகக் கூறியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications