ஈரோடு அருகே ரகசியமாக இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலை - பெண் உட்பட 6 பேர் கைது
ஈரோடு: ஈரோட்டில் ரகசியமாக இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலை ஒன்றை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். இங்கு போலி மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த அஞ்சுராம்பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரித்து வந்த போலீசார், நேற்று காலை 7 மணி அளவில் குறிப்பிட்ட தென்னந்தோப்பை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர்.
அப்போது தென்னந்தோப்பில் இருந்த வீட்டில் முருங்கத்தொழுவு கிராமத்தை சேர்ந்த மனோகரன்(45), ராஜேந்திரன்(30), லோகநாதன்(30), தனபால்(27). திருச்செங்கோட்டை சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி பாப்பாத்தி(40), அஞ்சுராம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (45) உள்ளிட்ட 6 பேர், போலி மதுபானம் தயாரித்தது தெரிய வந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், அங்கிருந்த 121 அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த மதுபானம் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதில் போலி மதுபானம் நிரப்பப்பட்ட 1,008 குவார்ட்டர் பாட்டில்கள், 120 ஆப் பாட்டில்கள் இருந்தன. இது தவிர 7 கேன்களில் 245 லிட்டர் எரி சாராயமும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
மனோகரன் தலைமையில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதமாக போலி மதுபானம் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட எரிசாராயத்தில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கலந்து, கலர் பவுடர்கள் கலந்து போலி மதுபானம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து பெறப்பட்ட காலி மதுபான பாட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பி உள்ளனர்.
மதுபான பாட்டிகளுக்கு தேவையான லேபிள்கள் புதுச்சேரியில் இருந்து பெறப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் மதுபான பாட்டிகளுக்கு மூடி பொருத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பி உள்ளனர்.
ஆத்தூர், ஈரோடு பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில், மேற்கண்ட போலி மதுபானம் பாட்டிகளை விற்பனை செய்து வந்துள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் வரும் வாடிக்கையாளர்களுக்கு போலி மதுபான பாட்டிகளை விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications