ஹைதராபாத்தில் ரூ20 ஆயிரம் கோடி புதையலால் பரபரப்பு

மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தின் தலைமை மேலாளர் டி.பி. ராஜூ தலைமையிலான 9 பேர் அடங்கிய குழு, ஆந்திர பிரதேச தலைமைச் செயலகம் எதிரே உள்ள பள்ளி வளாகத்தில் பல ஆயிரம் கோடி புதையல் இருப்பதாக தொல்லியல் துறையிடம் 2 மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். இருப்பினும் இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொல்லியல் துறையின் ஒரு குழுவினர் சனிக்கிழமை மாலை பள்ளிக்கூடத்தைப் பார்வையிட்டனர். இதையடுத்து இன்று பள்ளிவளாகத்தில் புதையலைத் தேடும் பணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
நேற்றைய ஆய்வின் போது தங்க நகைகளும் விலை மதிப்பற்ற ஆபரண கற்களும் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
புதையல் புதையுண்டு கிட்க்கும் பள்ளிக்கூடம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்தது. 12க்கு 12 அடி உள்ள சுரங்கப்பாதையில்தான் இப்புதையல் இருக்கிறது என்று மாநில கருவூல அதிகாரி சென்னா ரெட்டி தெரிவித்துள்ளார்.
புதையலின் பின்னணி
இத்தனை ஆயிரம் கோடி புதையலின் பின்னணி குறித்து வரலாற்று ஆய்வாளர் முகமது சபியுல்லா கூறியுள்ளதாவது:
2-வது உலகப் போரின் போது ஜப்பானின் வான் தாக்குதலில் இருந்து தப்பிக்க வசதி படைத்தவர்கள் தங்களது வீடுகளில் பங்கர்களை அமைத்திருந்தனர்.
இத்தகைய பங்கர் ஒன்று சைபாபாத் கல்லூரி வளாகம் ஒன்று கண்டறியப்பட்டது. இதேபோல் மிண்ட் வளாகத்திலும் இத்தகைய பங்கர்கள் கண்டறியப்பட்டன.
தற்போதைய புதையல் இருக்கும் பள்ளிக்கூடம், வனபர்தி சமஸ்தானத்துக்கு சொந்தமாக இருந்தது. இந்த சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஐந்தில் ஒரு பங்கு
புதையல் இருப்பதாக சுட்டிக்காட்டிய 9 பேர் குழுவினர், புதையல் இருப்பது உறுதியானால் தங்களுக்கு ஐந்தில் ஒரு பங்கு தர வேண்டும் என்று தொல்லியல் சட்டத்தைச் சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications