For Daily Alerts
Just In
கஞ்சா கடத்தியதாக தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை அட்டூழியம்!
ராமேஸ்வரம்: தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கஞ்சா கடத்தியதாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையிலடைத்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுக்காட்டுத்துறையைச் சேர்ந்த மனோகரன், செந்தில்குமார் மற்றும் சரவணன் மூவரும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அத்துமீறி வந்த இலங்கைக் கடற்படையினர் மூவரையும் கைது செய்து சென்றது. மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவரையும் இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
மூன்று தமிழக மீனவர்களும் தற்போது இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 5 தமிழக மீனவர்களை கஞ்சா கடத்தியதாகக் கூறி இலங்கை சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Three Tamil Nadu fishermen were arrested in Sri Lankan waters on charges of smuggling ganja, official sources said here on Sunday.
Story first published: Sunday, February 19, 2012, 13:22 [IST]