இத்தாலிய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய படகில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
கொல்லம்: கேரள கடல்பகுதியில் இத்தாலியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக மீனவர்களின் படகை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
கேரள மாநிலம் ஆலம்புழா கடலில் மீ்ன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேர் மீது அவ்வழியே சென்ற இத்தாலி நாட்டு எண்ணெய் கப்பலில் இருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜீஸ் பி்ங்கோவும், குமரி மாவட்டத்திலிருந்து தற்காலிகமாக இடம் பெயர்ந்து மீன்பிடி தொழில் செய்து வரும் செலஸ்டின் வாலன்டைனும் பரிதாபமாக படகினுள் பலியாகினர்.
நடுக்கடலில் நடந்த இந்த கொடூர கொலைகள் தொடர்பாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த 2 பாதுகாவலர்களை கேரள போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கேரள மாநிலத்திலும், எல்லை பகுதியான குமரியிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தாலிய கப்பலின் பாதுகாப்பு படை வீரர்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி 2 உயிர்களை பலி கொண்ட மீன்படி படகில் தடயவியல் (திருவனந்தபுரம்) நிபுணர்கள் ஆய்வு நடத்தினர்.
ஆய்வில் துப்பாக்கி குண்டு தாக்குதலில் சிதைந்த படகின் மேல்கூரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், ரத்தம் கொட்டிய பகுதிகளையும், துப்பாக்கி தோட்டா, மற்றும் துப்பாக்கி தோட்டாவின் வேகம், அதன் நீளம், அகலம், சேதம் அடைந்த பகுதியின் அளவு போன்ற பல்வேறு தடயங்களை காலை முதல் மாலை வரை சுமார் 6 மணி நேரம் சோதனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications