வாசுதேவநல்லூரில் சாதித்ததை சங்கரன்கோவிலிலும் நிகழ்த்துவாரா சதன் திருமலைக்குமார்?
சென்னை: சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சதன் திருமலைக்குமார் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.
சட்டசபை தேர்தலை புறக்கணித்த மதிமுக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றது. தனது கட்சி சார்பில் டாக்டர். சதன் திருமலைக்குமார் போட்டியிடுவார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். வைகோ மனதில் நிலையான இடத்தைப் பெற்றுள்ள திருமலைக்குமார் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியினர் ஏற்கனவே எதிர்பார்த்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.
அத்தகைய டாக்டர். சதன் திருமலைக்குமார் பற்றி சில தகவல்கள்,
59 வயதாகும் மருத்துவரான சதன் திருமலைக்குமாரின் சொந்த ஊர் சிங்கிலிப்பட்டி. அவரது தந்தை திருமலையாண்டி, தாய் ஆவுடையம்மாள். அவரது மனைவி குமாரி சந்திரகாந்தமும் ஒரு மருத்துவர். அவர்களுக்கு டாக்டர். தாய் விஜயரோகிணி, ஜெயந்தி பிரியதர்ஷினி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
அவர் கடந்த 1991ம் ஆண்டு தென்காசியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்றார். தொடர்ந்து 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியிலும், 2001ல் சங்கரன்கோவிலிலும் மதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து 2006ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தபோது வாசுதேவநல்லூரில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது மதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications