மின்வெட்டை சரி செய்ய என்னிடம் யோசனைகள் உள்ளன, ஆனால் யாரும் கேட்பதில்லை-ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil

திருச்சியில் மின்வெட்டைக் கண்டித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
மின்வெட்டால் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் மின்வெட்டை சரிசெய்வோம் என்று அதிமுக கூறியது. ஆனால் 8 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மின்வெட்டு நேரம் 8 மணி நேரம், 10 மணி நேரம் என அதிகரித்துள்ளது. மின்வெட்டை சரிசெய்யாமல் தம்முடன் இருந்தவர்களை கைது செய்து மக்களை திசைதிருப்புகின்றனர். எங்களிடம் மின்வெட்டை சரிசெய்ய பல்வேறு ஆலோசனைகள் உள்ளன. ஆனால் நாம் கூறினால் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் நூற்றுக்கணக்கான கட்சியினர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications