நள்ளிரவில் தடியடி: டெல்லி போலீஸுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்-ராம்தேவுக்கும்!

பாபா ராம்தேவ் குழுவினர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 4 ம் தேதி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.
அன்றைய தினம் இரவு, போராட்டக் குழுவினர் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, மைதானத்திற்குள் நுழைந்த காவல்துறையினர், அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதில், ராம்தேவ்வின் உதவியாளர் ராஜ்பாலா என்ற பெண்மணி படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.
இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
"தாக்குதல் சம்பவம் கண்டிக்கத் தக்கது. எந்த அசம்பாவித சூழலும் நிலவாத நிலையில் தடியடி பிரயோகித்தது ஏன்?" என்று டெல்லி காவல்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் .
மேலும், உயிரிழந்த ராஜ்பாலாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000மும் வழங்கவும் உத்தரவிட்டனர்












Click it and Unblock the Notifications