பிரபல பத்திரிக்கையாளர் கொலை சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்!

இது குறித்து சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
லண்டனில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் பிரபல செய்தியாளராக சிரியாவில் செய்தி சேகரிக்கும் பணியில் இருந்த போது சிரிய படைகளின் தாக்குதலால் மேரி கொல்வின் படுகொலை செய்யப்பட்டார்.
ஒரு துணிச்சல் மிகுந்த செய்தியாளரான மேரி, கொசோவோ, செச்சினியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் முனைகளில் செய்தியாளராகப் பணியாற்றி உள்ளார். அவர் இலங்கையில் பணியாற்றிய போது இலங்கை படையினரின் தாக்குதலில் ஒரு கண்ணை இழந்தார்.
போர் பிரதேசங்களில் பெண்கள், சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் குறித்த செய்திகளை வெளிக்கொணரந்து உலகின் கண்களுக்கு கொண்டு வருவதில் அவர் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
இலங்கை போரின் இறுதிக் கணங்களில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினருக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் இடையில் தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொடுத்த மேரி கொல்வின், இலங்கை அரசு செய்த யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து சாட்சியாகவும் இருந்தார்.
சமீபகாலமாக ஐனாதிபதி அசாத் தலைமையிலான சிரிய அரசு, தமது நாட்டில் நடைபெறும் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு வருவதாக கூறப்படுகின்றது.
அங்கு நடைபெறும் பயங்கரவாதத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியதில் மேரி கொல்வினின் பங்கு அளப்பது அரிது. அவரது முயற்சி முடிவுடையும் முன்னரே அவர் கொல்லப்பட்டு உள்ளார்.
சர்வதே மனித உரிமை விதிகளை மதிக்காது ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிரிய அரசாங்கத்தை கண்டிப்பதுடன், இந்த விஷயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாடுகளை சர்வதேச தமிழ் செய்தியாளர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது.
கடமை உணர்வுமிக்க துணிகரமான ஒரு ஊடகவியலாளரை இழந்து தவிக்கும் சக ஊடவியலாளர்களுக்கும், மேரி கொல்வின் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications