Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் பெரும் ஊழல்?

Subscribe to Oneindia Tamil

Antony
டெல்லி: முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக ரூ.3500 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டு உள்ளார்.

ஹெலிகாப்டர்கள்

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட மிகமுக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக நவீன வசதிகளை உள்ளடக்கிய 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக ஐரோப்பியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் ரூ.3546 கோடிக்கு கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது.

இத்தாலி ராணுவ உதவியுடன் கூடிய இந்த நிருவனத்தில் 8 மிக முக்கிய பிரமுகர்களுக்கு நவீன ஹெலிகாப்டர்களும்,

4 சாதாரண வகை ஹெலிகாப்டர்களும் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

முறைகேடு

இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக இத்தாலியில் உள்ள பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியானது. முறைகேடு பற்றி விசாரணை தொடங்கியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த முறைகேட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+