கொள்ளையர்களை சுட்டுத்தள்ளவே போலீஸார் நினைத்தனர்: ஹென்ரி திபேன் குற்றச்சாட்டு
சென்னை: சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் சுடடுக் கொன்றதற்கு மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்ரி திபேன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்த கொடூரச் சம்பவம் சென்னை மாநகர காவல்துறையின் தரம் எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும் விதமாக உள்ளது. அவர்களை உயிருடன் பிடிக்க சென்றிருந்தால் அவர்களை உயிருடன் பிடித்திருக்க வேண்டும். அந்த கொள்ளையர்களின் சரித்திரத்தை மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதிகாலையில் சம்பவம் நடந்தும் காலை 6 மணி வரை அந்த பகுதியில் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காதது காவல் துறை எதையோ மறைப்பதற்காக நடத்திய நாடகமாகவே தெரிகிறது.
கொல்லப்பட்ட 5 பேரில் ஒருவரை மட்டும் யார் என்று வீடியோ கிளிப்பிங்கில் காட்டினார்கள். மீதமுள்ள 4 பேர் யார், அவர்களுக்கும் இந்த கொள்ளைச் சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளதா, இல்லையா. இல்லை அவர்கள் அந்த வீட்டில் இருந்த சாதாரண ஆட்களா என்ற எந்த விவரமும் தெரியவில்லை.
கொள்ளையர்களை சுட்டுக்கொன்றதற்கு போலீசார் கூறியுள்ள காரணம் நாடகச் செயலாக உள்ளது. இது குறித்து மனித உரிமை ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications