பொக்கிஷம் குவிந்துள்ள பத்மநாபசுவாமி கோயில் 'சி' அறையும் திறக்கப்பட்டது!

பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி கடந்த 20ந் தேதி தொடங்கியது. மதிப்பீட்டு குழு தலைவர் வேலாயுதன் நாயர் தலைமையில் இப்பணி நடக்கிறது.
முதலில் ‘ சி‘ ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த அறையை திருவனந்தபுரம் மாவட்ட சார்பு நீதிமன்றம் பூட்டி சீல் வைத்து இருந்ததால் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த ‘இ, ‘எப்’ அறைகள் முதலில் திறக்கப்பட்டன. இந்நிலையில் ‘ சி‘ ரகசிய அறையை திறக்க கடந்த வாரம் அனுமதி அளித்தது. இதையடுத்து இந்த அறை இன்று திறக்கப்பட்டு பொக்கிஷங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன. மாலை 5 மணி வரை வல்லுநர் குழு உறுப்பினர்கள் பொக்கிஷங்களை மதிப்பிடுவர்.
ஏற்கனவே "சி" அறையைத் திறந்தால் சுனாமி அல்லது பேரழிவு ஏற்படும் என்று வதந்தி கிளப்பப்பட்டிருப்பதால் திருவனந்தபுரம் உட்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறப்பு அறை
இதனிடையே திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பொக்கிஷங்களை பாதுகாக்க சிறப்பு அறை கட்டப்பட உள்ளதாக மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உயர்நிலைக்குழுவின் தலைவர் வேலாயுதம் நாயர் கூறியதாவது: பொக்கிஷங்களுக்கான் சிறப்பு அறை எங்கு கட்டப்பட உள்ளது மற்றும் எத்தகைய பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட உள்ளது குறித்த அறிக்கை 3 வாரத்தில் தயாரிக்கப்படும். பின்னர் இந்த அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications