For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொக்கிஷம் குவிந்துள்ள பத்மநாபசுவாமி கோயில் 'சி' அறையும் திறக்கப்பட்டது!

By Mathi
Google Oneindia Tamil News

Padmanabha Swamy Temple
திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பொக்கிஷங்கள் உள்ள "சி" அறை இன்று திறக்கப்பட்டிருப்பதால் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு என்னென்ன புதைந்து கிடக்கிறதோ என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி கடந்த 20ந் தேதி தொடங்கியது. மதிப்பீட்டு குழு தலைவர் வேலாயுதன் நாயர் தலைமையில் இப்பணி நடக்கிறது.

முதலில் ‘ சி‘ ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த அறையை திருவனந்தபுரம் மாவட்ட சார்பு நீதிமன்றம் பூட்டி சீல் வைத்து இருந்ததால் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த ‘இ, ‘எப்’ அறைகள் முதலில் திறக்கப்பட்டன. இந்நிலையில் ‘ சி‘ ரகசிய அறையை திறக்க கடந்த வாரம் அனுமதி அளித்தது. இதையடுத்து இந்த அறை இன்று திறக்கப்பட்டு பொக்கிஷங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன. மாலை 5 மணி வரை வல்லுநர் குழு உறுப்பினர்கள் பொக்கிஷங்களை மதிப்பிடுவர்.

ஏற்கனவே "சி" அறையைத் திறந்தால் சுனாமி அல்லது பேரழிவு ஏற்படும் என்று வதந்தி கிளப்பப்பட்டிருப்பதால் திருவனந்தபுரம் உட்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறப்பு அறை

இதனிடையே திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பொக்கிஷங்களை பாதுகாக்க சிறப்பு அறை கட்டப்பட உள்ளதாக மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உயர்நிலைக்குழுவின் தலைவர் வேலாயுதம் நாயர் கூறியதாவது: பொக்கிஷங்களுக்கான் சிறப்பு அறை எங்கு கட்டப்பட உள்ளது மற்றும் எத்தகைய பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட உள்ளது குறித்த அறிக்கை 3 வாரத்தில் தயாரிக்கப்படும். பின்னர் இந்த அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

English summary
Padmanabha Swamy Temple in Thiruvananthapuram treasures "C" vault was opened today, after the court permission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X