நதிகள் இணைப்புத் திட்டத்தை ஏற்க மாட்டோம்: கேரளா

திருவனந்தபுரத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் உம்மன் சாண்டி கூறியதாவது:
நதிநீர் இணைப்பு விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரள மாநிலத்திற்கு பொருந்தாது. ஏனென்றால், இதுவரையில் நதிநீர் இணைப்பு தொடர்பாக எந்தவிதமான ஒப்புதலையும் கேரள அரசு வழங்கவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி நதிநீர் இணைப்பை மேற்கொண்டால் கேரள மாநிலம் மிகவும் பாதிக்கப்படும். எனவே, நதிநீர் இணைப்பு தொடர்பான எந்தவித திட்டத்தற்கும் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காது என்றார் அவர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தனிச் சட்டம் போட்டு ஒன்றுமில்லாமல் செய்தது கேரளா என்பது நினைவிருக்கலாம். இப்போது தமிழகத்திற்குப் பயன் வந்து விடுமோ என்ற ஒரே காரணத்தை மனதில் கொண்டே நதிகளை இணைக்க முடியாது என்று அது கூறியுள்ளதாக கருதப்படுகிறது.
கேரளாவில் உள்ள பெரும்பாலான நதிகள் வீணாக கடலில் போய்த்தான் கலந்து வருகின்றன என்பது நினைவிருக்கலாம். தண்ணீர் வீணாகப் போய் கடலில் கலந்தாலும் கலக்கும், தமிழகத்திற்குத் தர மாட்டோம் என்பதுதான் கேரளாவின் நிலைப்பாடாக காலம் காலமாக உள்ளது.
கப்பல் வழக்கு
மேலும் இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாவலர்களால், இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், நீதிமன்றத்துக்கு வெளியே எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்றும் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
"இந்த விவகாரத்தில் இத்தாலி ஊடகங்கள் தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டு வருகின்றன'' என்பதும் உம்மன் சாண்டியின் குற்றச்சாட்டு.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications