இடைத்தேர்தல்: மின்வெட்டு பிரச்சனையை கையில் எடுக்கும் திமுக
சங்கரன்கோவில்: தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டுப் பிரச்சனையை கையில் எடுத்து வாக்கு சேகரிக்க திமுக திட்டமிட்டுள்ளது.
தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின்வெட்டு பிரச்சனை சங்கரன்கோவில் தொகுதியிலும் உள்ளது. சுமார் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை இப்பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் இங்குள்ள விசைத்தறி தொழில் அடியோடு முடங்கி போய் உள்ளது. விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைக்கின்றனர். இந்நிலையில் வரும் 18ம் தேதி சங்கரன்கோவிலில் இடைத்தேர்தல் நடக்கிறது.
தேர்தலையொட்டி தொகுதியில் முகாமிட்டுள்ள அதி்முகவினர் நகர்புறங்களில் மட்டுமே வாக்கு சேகரி்தது வருகின்றனர். மின்வெட்டு பிரச்சனையால் கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இதனை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ள தி்முகவினர் புது வியூகம் வகுத்து வருகின்றனர். அதாவது அதி்முகவின் எதிர்ப்பு ஓட்டுகள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே திமுகவுக்கு விழும் வகையில் மின்வெட்டு பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதன்படி கிராமப்புறங்களில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு மின்வெட்டுப் பிரச்சினையை மக்கள் மத்தியில் தீவிரமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications