கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு ஜெர்மனிக்காரரிடமிருந்து பாய்ந்த ரூ. 12 கோடி!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என வலியுறுத்தி கடந்த 7 மாதமாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ரெய்னர் ஹெர்மன், என்பவரை கடந்த 26ம் தேதி மத்திய உளவு பிரிவு போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த விசாரணைக்குப் பின்னர் உடனடியாக ஹெர்மனை நாடு கடத்தி விட்டனர்.
கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் லால்மோகன் ஆகியோருடன் இவருக்கு தொடர்பு இருந்ததாகவும், இதற்கான ஆதாரங்கள் இவரின் லேப்டாப், செல்போனில் இருப்பதாகவும் தெரிய வந்தது.
ஹெர்மனின் லேப்டாப்பில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான படங்கள், போராட்டங்கள் நடந்த படங்கள் உள்ளிட்டவை இருந்தன. அதை விட முக்கியமாக பணப் பட்டுவாடா குறித்த விவரங்களும் சிக்கியுள்ளன.
தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ள நெல்லை, குமரி, தூத்துக்குடியில் உள்ள 4 தொண்டு நிறுவனங்களுக்கும் இவர் மூலம்தான் பணம் போயுள்ளது. இதற்கான ஆதாரங்கள் இந்த லேப்டாப்பில் சிக்கியுள்ளன. மேலும் இந்த அமைப்புகளுடன் ஹெர்மனுக்கு இருந்த தொடர்பு குறித்த ஆதாரங்கள் அவரது மொபைல் போனிலும் இருந்தது. அதையும் தற்போது சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.
இதுவரை கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு ரூ. 12 கோடி வரை பணம் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் கடந்த 4 மாதத்தில் மட்டும் ரூ. 4 கோடியை கொடுத்துள்ளார் ஹெர்மன். இவற்றை அந்த தொண்டு நிறுவனங்கள்தான் வாங்கியுள்ளன.
இந்தத் தகவல்களை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் கூறுகையில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஹெர்மன் என்பவர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்தவர். அவரது நடவடிக்கைகள் சுற்றுலா விசாவில் வந்தவருக்கு பொருத்தமானதாக இல்லை. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததால் ஜெர்மன் நாட்டுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
அறக்கட்டளை பணிக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை திருப்பி விட்டதாக 4 தொண்டு நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications