சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: போன், பேக்ஸ் மூலம் புகார் தெரிவிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் முறைகேடுகள் குறித்து போன், பேக்ஸ் மூலம் தேர்தல் பார்வையாளர்களிடம் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சங்கரன்கோவில் தொகுதிக்கு பொது தேர்தல் பார்வையாளராக உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மறு சீரமைப்பு கமிஷனர் ரமேஷ் குமார் சதான் சூ, போலீஸ் பார்வையாளராக பரோடா டி.ஐ.ஜி. விஜயராஜ்சிங் கவுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில் கலெக்டர் செல்வராஜ், டி.ஆர்.ஓ. உமா மகேஸ்வரி, எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்திரசேகரன், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் விஜயகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் ராமச்சந்திரன், பி.ஆர்.ஓ. மதிமாறன், ஏ.பி.ஆர்.ஓ. நவாஸ் கான், தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் பார்வையாளர்கள் இருவரும்ம் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகை கட்டடத்தில் அறை எண் 1 மற்றும் 2ல் தங்கியுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் மற்றும் புகார்கள் குறித்து பொதுமக்கள் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை தேர்தல் பார்வையாளர்களை சந்திக்கலாம்.

தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார் சுதான்சூவை 94890 51192, பேக்ஸ் - 2500198, விஜய்ராஜ் சிங் கவுதமை 94890 51193, பேக்ஸ் - 2501169 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+