உத்தரப்பிரதேசத்தில் வெல்லப்போவது யாரு? சுறுசுறு சூதாட்டம்

உத்தரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் அமையும் என்பது பெரும்பாலான சூதாட்டக்காரர்களின் கருத்து.
இதேபோல் சமாஜ்வாதி கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றினாலும் தொங்கு சட்டப்பேரவைதான் அமையும் என்பது மற்றொரு ஆரூடம்.
சூதாட்ட சந்தையில் 80 முதல் 84 விழுக்காட்டினர் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் அமையும் என்றும் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் ஆட்சி அமைக்கும் என்று 76 முதல் 79 விழுக்காட்டினரும் பணம் கட்டியிருக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைக்கும் என்று 45 முதல் 55 விழுக்காட்டினர் பணம் கட்டியுள்ளனர்.
சூதாட்ட உலக ஆரூடத்தின்படி சமாஜ்வாதி கட்சி 146 முதல் 150 இடங்களையும் பகுஜன் சமாஜ் மட்டும் 106-109 இடங்களையும் கைப்பற்றுமாம்
காங்கிரஸ் கட்சி 69 முதல் 72 இடங்களையும் பாரதிய ஜனதா கட்சிக்கு 56 முதல் 59 இடங்களையும் வெல்லலாம்.
லக்னோ சூதாட்ட சந்தையைப் போலத்தான் டெல்லி சூதாட்ட சந்தையும். சமாஜ்வாதி கட்சிக்கு 140, பகுஜனுக்கு 120, காங்கிரஸுக்கு 70, பாஜகவுக்கு 55 முதல் 60 இடங்கள் என்று கணித்து வைத்திருக்கிறது டெல்லி சூதாட்ட கேங். டெல்லியில் மட்டும் ரூ15 கோடி அளவுக்கு உத்தரப்பிரதேச தேர்தல் தொடர்பான "சூதாட்ட வர்த்தகம்" இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இவ்வளவு கணிச்சவங்க அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் சூதாடாமல் விட்டதற்கு "ஜனநாயக" கடமைதான் காரணமோ என்னவோ?












Click it and Unblock the Notifications