கிங்பிஷர் நிறுவனத்துக்கு சோதனை மேல் சோதனை - 40 வங்கிக் கணக்குகள் முடக்கம்

இது தொடர்பாக சேவை வரிகள் இயக்குநர் சோலங்கி கூறியுள்ளதாவது:
கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சேவை வரியாக செலுத்த வேண்டியதில் ரூ40 கோடி பாக்கி வைத்திருந்தது. இந்த பாக்கியை கட்டுவதற்கு பிப்ரவரி 29ந்தேதி வரை கெடு விதித்திருந்தோம். ஆனால் கெடு காலத்துக்குள் கிங்பிஷர் நிறுவனம் பாக்கித் தொகையை செலுத்தவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக அந்நிறுவனத்தின் 40 வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளோம் என்றார் அவர்.
பிப்ரவரி 29-ந் தேதிக்குள் ரூ20 கோடியை செலுத்துவதாக கிங்பிஷர் நிறுவனம் உறுதி அளித்திருந்தது. ஆனால் அதை செலுத்தாததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிங்பிஷர் நிறுவனம் ரூ70 கோடி சேவை வரி செலுத்த வேண்டியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் ரூ30 கோடியை செலுத்திவிட்டது.
கடந்த 4 மாதங்களில் 4 வது முறையாக கிங்பிஷர் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் வருமான வரித்துறை கிங்பிஷர் வங்கிக் கணக்கை முடக்கியது.












Click it and Unblock the Notifications