கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொழில்நீர்தியாக சுதாரிக்கவில்லை: அமைச்சர் வீரப்ப மொய்லி

இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா என்னை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு நான் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளேன். இந்த நிலையில் கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர் சாதகமான முடிவை தெரிவிப்பார் என நினைக்கிறேன்.
தொழில் ரீதியாக அந்த நிறுவனம் சுதாரித்துக் கொள்ளவில்லை, இந்த சூழ்நிலையில் மல்லையா தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை திறம்பட நடத்துவார். அவரது முயற்சியால் அந்த நிறுவனம் கடன் சுமையில் இருந்து மீண்டு விடும் என எதிர்பார்க்கிறேன்.
இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா உள்ளிட்ட நமது சில விமான நிறுவனங்கள் ஒட்டுமொத்த சிக்கலை சந்தித்ததற்கு அந்த நிறுவனங்களின் நிர்வாக திறன் குறைபாடுதான் காரணமாகும். இதன் மூலம் மற்ற விமான நிறுவனங்கள் பாடம் கற்றுக் கொண்டு சிக்கலில் இருந்து விடுபடவேண்டும் என்றார் அவர்.
கிங்பிஷர் நிறுவனத்துக்கு ரூ.7,057 கோடிக்கு கடன் இருக்கிறது. மேலும் ரூ.6 ஆயிரம் கோடி நட்டத்தையும் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்த நிறுவனம் நிதிநெருக்கடியில் தத்தளித்து வருகிறது.












Click it and Unblock the Notifications