11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விஜயகாந்த்தும், பிரேமலதாவும் புயல் பிரசாரம்!

ஆறு நாட்களும், ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து போய் புயல் வேகப் பிரசாரம் மேற்கொண்டு தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளனர்.
இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 6 நாட்கள், தே.மு.தி.க. வேட்பாளர் கே.முத்துக்குமார் வெற்றிக்காக மக்களிடம் வாக்குகளை சேகரிக்க தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.
அவரது சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக ஆக்கும் வகையில் ஆங்காங்கே உள்ள கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், ஆதரவாளர்களும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நம்முடைய தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் விஜயகாந்தின் சுற்றுப்பயண விவரத்தை முன்கூட்டியே தெரிவித்து அவர்களும் கலந்து கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் கழக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டிக்கு ஒரு நாள் மட்டும்
தேமுதிகவின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மார்ச் 9ம் தேதி சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்யவுள்ளாராம்.












Click it and Unblock the Notifications