ஈரானுக்கு பணம் அனுப்பும் சிக்கலுக்கு மத்திய அரசு புதிய தீர்வு
டெல்லி: அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை இறுக்கி, அந் நாட்டின் மத்திய வங்கியோடு பணப் பரிமாற்றம் செய்யவும் தடை போட்டுள்ளதால், அந் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் சிக்கலில் ஆழ்ந்துள்ளன என்பதை சமீபத்தில் சுட்டிக் காட்டியிருந்தோம் (கச்சா எண்ணெய்க்காக ஈரானுக்கு பணம் அனுப்ப இந்தியா படும் பாடு!)
இப்போது, அந்தப் பிரச்சனைக்கு மத்திய அரசு ஒரு தீர்வைக் கண்டுள்ளது. இந்தியாவிடம் இருந்து டாலருக்குப் பதில் ரூபாயாகவே வாங்கிக் கொள்ள ஈரான் முன் வந்துள்ளது. யுகோ வங்கி மூலமாக இந்த பணப் பரிவர்த்தனை நடக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே சர்வதேச பொருளாதாரத் தடைகளால் கடந்த செப்டம்பர் முதல் ஈரானின் கரன்சியான ரியாலின் மதிப்பு 50 சதவீதம் வரை சரிந்துவிட்டது. இதனால் துபாய் உள்ளிட்ட நாடுகளின் துறைமுகங்கள் மூலமாக ஈரானுக்கு சரக்கு அனுப்பிய இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
ஈரானின் கரன்சி மதிப்பு குறைந்துவிட்டதால், அவர்களுக்கு சரக்கை அனுப்ப உதவும் துபாய் உள்ளிட்ட நாடுகள், இந்திய ஏற்றுமதியாளர்களிடம் ஏராளமான சலுகைகளைக் கோருகின்றன. அதாவது ஈரானுக்கு சரக்குகுளை அனுப்ப தங்களது கரன்சியை இடைச் செலவீனமான பயன்படுத்தவதால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், இந்த நஷ்டத்தை இந்தியா தான் ஈடு செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றன.












Click it and Unblock the Notifications