சிரஞ்சீவியை மாநிலங்களவை உறுப்பினராக்கி அமைச்சரவையில் சேர்க்க காங்கிரஸ் முடிவு!
ஐதராபாத்: காங்கிரஸ் கட்சியில் பிரஜா ராஜ்யம் கட்சியோடு ஐக்கியமான ஆந்திர மெகாஸ்டார் சிரஞ்சீவியை மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சராக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவை எம்.பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் மார்ச் 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் 6 இடங்களில் சிரஞ்சீவைக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைத்திருக்கிறது காங்கிரஸ்.
பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்ட போது ஏற்பட்ட டீலிங்கில் சிரஞ்சீவியை மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சராக்கிக் கொள்வது என்பதும் ஒன்று. இதனை நிறைவேற்றும்விதமாக சிரஞ்சீவியை மாநிலங்களவை எம்.பியாக்குகிறது காங்கிரஸ்.
தற்போதைய ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரசுக்கு 4 உறுப்பினர்களும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் உண்டு. காங்கிரஸில் முன்னாள் மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவும் ரேணுகா சவுத்ரியும் டெல்லி செல்வாக்குகள் மூலம் தங்களை மாநிலங்களவை எம்;பியாக்கிக் கொள்ள முயற்சிப்பார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications