அமைச்சரவையில் உள்ளவர்களையே ஜெ.வுக்கு தெரியாது: ஜெ.வை. வம்புக்கு இழுக்கும் சுதீஷ்

தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ் பேசியதாவது,
திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேறியபோது அவருக்கு ஆதரவு கரம் நீட்டியவர்கள் கம்யூனிஸ்ட் தான். அதற்கு அடுத்த தேர்தலில் அதி்முக அமோக வெற்றி பெற்று எம்ஜிஆர் முதல்வர் ஆனார். அது போல அதிமுக கூட்டணியில் இருந்து இப்போது தேமுதிக வெளியேறியுள்ள போது மார்க்கிஸ்ட்கள் தான் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் தேமுதிக 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். தமிழக அமைச்சரவையில் நடக்கும் மாற்றங்கள் குறித்து அமைச்சர்களுக்கே தெரியவில்லை. முதல்வர் ஜெயலலிதாவுக்குமே அமைச்சரவையில் யார் இருக்கிறார்கள் என்பது முழுமையாக தெரியாது.
சட்டசபையில் அதிமுக விடுத்த சவாலை தேமுதிக எதிர்கொள்ள தயாராகிவிட்டது. ஆனால் தேமுதிக விடுத்த சவாலை எதிர்கொள்ள அதிமுக தயாரா? என்றார்.












Click it and Unblock the Notifications