திருவாரூரில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை: புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூரில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
திருவாரூர் மத்திய பேருந்து நிலையித்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று இரவு யாரோ செருப்பு மாலை போட்டு அவமதித்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ரவுண்டானா அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிலை அவமதிப்பு குறித்து புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications