கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்க வேண்டும்: ரஷிய துணை தூதர் வேண்டுகோள்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று சென்னையில் உள்ள ரஷிய துணை தூதர் நிக்கோலே ஏ லிஸ்டோபாடோவ் கூறி உள்ளார்.
ரஷியாவில் புதிய அதிபரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. சென்னையில் உள்ள ரஷிய துணை தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரஷிய துணை தூதர் நிக்கோலே ஏ லிஸ்டோபாடோவ் மற்றும் தூதரக அதிகாரிகள் வாக்களித்தனர்.
வாக்கு அளித்த பின் துணை தூதர் நிக்கோலே ஏ லிஸ்டோபாடோவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றியும், மின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுவதை அமெரிக்காவில் உள்ள சில அமைப்புகள் விரும்பவில்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை இங்குள்ள சில தொண்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருந்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் அவ்வாறு கூறியதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவரது கருத்தை நம்பாமல் இருக்க எந்த காரணமும் இல்லை. ஆனால் அவர் கூறியது போன்ற சூழ்நிலை ஏற்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்று நம்புகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் தனது உற்பத்தியை தொடங்க வேண்டியதன் அவசியத்தை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications