பகுஜன் சமாஜ் அரசு வைத்த மாயாவதி, யானை சிலைகளை இடிக்க மாட்டோம்-அகிலேஷ்

மாயாவதி முதல்வராக இருந்தபோது பல நூறுகோடி செலவில் லக்னோவிலும் பிற இடங்களிலும் ஏராளமான நினைவிடங்கள், பூங்காக்களை அமைத்தார் மாயாவதி. மேலும் அங்கு கன்ஷிராம், அம்பேத்கர் மற்றும் தனது சிலைகளை பெருமளவில் நிறுவினார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானையின் சிலைகளையும் நூற்றுக்கணக்கில் நிறுவினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி சுப்ரீம் கோர்ட் வரை சென்றது.
தேர்தல் பிரசார சமயத்தில், இந்த சிலைகளை துணியைப் போட்டு தேர்தல் ஆணையம் மூடி மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த சிலைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அகற்றுவோம் என்று ஏற்கனவே கூறியிருந்தார் அகிலேஷ் யாதவ். ஆனால் தற்போது அப்படிச் செய்ய மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முலாயம் சிங் யாதவின் மகனான அகிலேஷ் இதுகுறித்துக் கூறுகையில், பெரும் பொருட் செலவில் இந்த சிலைகளை உருவாக்கியுள்ளனர். இதை இடிக்கவும் மாட்டோம், அகற்றவும் மாட்டோம். பத்திரமாக இவை இருக்கும் என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று கேட்டபோது, திறமையான நிர்வாகத்தைத் தராததே காரணம் என்றார் அகிலேஷ்.












Click it and Unblock the Notifications