செக் மோசடி வழக்கு: அசாருதீனுக்கு ரூ.15 லட்சம் அபராதம் - டெல்லி நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எம்.பி.யுமான அசாருதீன், சஞ்சய் சோலன்கி என்பவருக்கு ரூ.1.5 கோடிக்கான காசோலை கொடுத்தார். ஆனால் அவரது வங்கி கணக்கில் காசில்லாமல் அந்த காசோலை திரும்பி வந்தது. மேலும் சோலங்கிக்கு பணம் தர அசாருதீன் மறுத்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து சோலன்கி டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் இவ்வழக்கில் 10க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். இதனால் அசாருதீன் மீது ஜாமீனில் வெளி வர இயலாத பிடிவாரண்ட்டை மெட்ரோபாலிட்டன் நீதிபதி விக்ராந்த் வைத் பிறப்பித்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான அசாருதீன், இப்பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி விக்ராந்த் தெரிவித்த தீர்ப்பில் கூறியதாவது,
பிரச்சனையை சுமூகமாக முடித்து கொள்ள விரும்பினால் குற்றவாளி (அசாருதீன்) முதல் முறையே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் குற்றவாளி அலட்சியமாக செயல்பட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளார்.
செக் மோசடி வழக்கில் நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிப்பதாக கருதினால், மொத்த தொகையில் 10 சதவீதத்தை அபராதமாக விதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, அசாருதீனுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்படுகின்றது. மேலும் அசாருதீனுக்கு பிணைப் பத்திரமும், உறுதி மொழியும் அளித்த அவரது நண்பருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகின்றது என்றார்.
சஞ்சய் சோலன்கிக்கு அளிக்க வேண்டிய ரூ.1.5 கோடி பணத்தை திரும்ப அளிப்பதாக அசாருதீன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications