செக் மோசடி வழக்கு: அசாருதீனுக்கு ரூ.15 லட்சம் அபராதம் - டெல்லி நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எம்.பி.யுமான அசாருதீன், சஞ்சய் சோலன்கி என்பவருக்கு ரூ.1.5 கோடிக்கான காசோலை கொடுத்தார். ஆனால் அவரது வங்கி கணக்கில் காசில்லாமல் அந்த காசோலை திரும்பி வந்தது. மேலும் சோலங்கிக்கு பணம் தர அசாருதீன் மறுத்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து சோலன்கி டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் இவ்வழக்கில் 10க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். இதனால் அசாருதீன் மீது ஜாமீனில் வெளி வர இயலாத பிடிவாரண்ட்டை மெட்ரோபாலிட்டன் நீதிபதி விக்ராந்த் வைத் பிறப்பித்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான அசாருதீன், இப்பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி விக்ராந்த் தெரிவித்த தீர்ப்பில் கூறியதாவது,
பிரச்சனையை சுமூகமாக முடித்து கொள்ள விரும்பினால் குற்றவாளி (அசாருதீன்) முதல் முறையே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் குற்றவாளி அலட்சியமாக செயல்பட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளார்.
செக் மோசடி வழக்கில் நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிப்பதாக கருதினால், மொத்த தொகையில் 10 சதவீதத்தை அபராதமாக விதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, அசாருதீனுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்படுகின்றது. மேலும் அசாருதீனுக்கு பிணைப் பத்திரமும், உறுதி மொழியும் அளித்த அவரது நண்பருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகின்றது என்றார்.
சஞ்சய் சோலன்கிக்கு அளிக்க வேண்டிய ரூ.1.5 கோடி பணத்தை திரும்ப அளிப்பதாக அசாருதீன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications