முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுங்கள்-பாதல், இபோபி சிங்குக்கு கருணாநிதி வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

Karunanidhi and Prakash Singh Badal
சென்னை: பஞ்சாப் மற்றும் மணிப்பூர் சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் இபோபி சிங் ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியையும் அனுப்பியுள்ளார்.

பாதலுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்தில்,

பஞ்சாப் மக்கள் தங்களது தேர்தல் தீர்ப்பு மூலமாக உங்கள் மீது அவர்களது நம்பிக்கையை மீண்டும் நிலை நாட்டியுள்ளனர். தாங்கள் தொடர்ந்து முதல்வராக நீடிக்கும் காலத்தில் பஞ்சாப் மக்களின் எதிர்பார்ப்புகளும், விழைவுகளும் நிறைவேற்றப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல பாதலின் வாரிசான அவரது மகனும், துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதலுக்கு அனுப்பியுள்ள செய்தியில், மாநிலத்தின் நல்ல முன்னேற்றத்திற்கான உங்களது முயற்சிகள் அனைத்திலும் தொடர் வெற்றி பெற என்னுடைய விழைவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்குக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில், தொடர்ந்து முதல்வராக தங்களது காலத்தில் மணிப்பூர் மக்களின் எதிர்பார்ப்புகளையும், விழைவுகளையும் நிறை வேற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களது நீண்டகால, பலதரப்பட்ட அனுபவங்களுடன் மணிப்பூர் மாநிலத்துக்கு தாங்கள் மிகச் சிறந்த ஆட்சியை அளிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+