இலங்கைக்கு எதிரான தீர்மானம்: பிரதமருக்கு 2 கடிதம் எழுதிய ஜெ.வுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு
சென்னை: ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வருக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலிபுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா 2வது முறையாக கடிதம் எழுதி இருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் இது குறித்த தீர்மானம் முதல்வரால் முன்மொழியப்பட்டு அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். ஒட்டு மொத்தமாக தமிழக மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்று ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இந்தியா நடந்து கொள்ள வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications