அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!
தர்மபுரி: நண்பரின் 43 வயது தாயாருடன் தகாத உறவு வைத்திருந்த 26 வயது இளைஞர், தனது உறவுக்கு திருமணம் மூ்லம் தடை வந்ததால் அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
சமூகம் எந்த அளவுக்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி உதாரணமாக அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
அந்த ஊரைச் சேர்ந்தவர் மாது என்கிற பாரத். 26 வயதாகி விட்ட இவர் இப்போதுதான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.
இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. மார்ச் 4ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பே மாது வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால் திருமணம் நின்று போனது.
இந்த நிலையில் மாதுவுடன் பிளஸ்டூவில் ஒன்றாகப் படித்த நவீன்குமார், தனது தந்தை செல்வராஜுடன் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். நவீன்குமாரின் தாயார் ஜோதி பாப்பிரெட்டிபட்டியில் தனியாக தங்கியிருந்தார்.
நேற்று அதிகாலையில் நவீன்குமாரும், செல்வராஜும் ஊருக்கு வந்தனர். வீட்டுக் கதவைத் தட்டியபோது அது திறக்கவில்லை. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அப்போது ஜோதியும், அவருக்கு அருகே மாதுவும் சேலையில் தூக்குப் போட்டு பிணமாக தொங்கியதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். பிணங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.
தனது வீட்டில் தனியாக வசித்து வந்த ஜோதியை, அவ்வப்போது வந்து பார்த்துள்ளார் மாது. நண்பரின் தாயார் என்ற வகையில் ஆரம்பத்தில் இவர்களது சந்திப்புகள் இருந்துள்ளன. பின்னர் இது தவறான பாதைக்குத் திரும்பி விட்டது. இருவரும் அடிக்கடி கள்ள நோக்கத்துடன் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த தகாத உறவு குறித்து மாதுவின் வீட்டுக்குத் தெரிய வந்து அதிர்ந்து போயினர். இதனால்தான் அவருக்கு வேகம் வேகமாக பெண் பார்த்து திருமணத்தை நிச்சயித்தனர். ஆனால் ஜோதியை விட்டுப் பிரிய மனமில்லாத மாது, வீட்டை விட்டு வெளியேறி ஜோதி வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் தங்களது முடிவை நாடி விட்டனர்.
பொருந்தாத உறவும், தகாத உறவும் கடைசியில் இப்படித்தான் ஆகும் என்பதற்கு மாது, ஜோதி இன்னும் ஒரு உதாரணமாகியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications