அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!
தர்மபுரி: நண்பரின் 43 வயது தாயாருடன் தகாத உறவு வைத்திருந்த 26 வயது இளைஞர், தனது உறவுக்கு திருமணம் மூ்லம் தடை வந்ததால் அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
சமூகம் எந்த அளவுக்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி உதாரணமாக அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
அந்த ஊரைச் சேர்ந்தவர் மாது என்கிற பாரத். 26 வயதாகி விட்ட இவர் இப்போதுதான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.
இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. மார்ச் 4ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பே மாது வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால் திருமணம் நின்று போனது.
இந்த நிலையில் மாதுவுடன் பிளஸ்டூவில் ஒன்றாகப் படித்த நவீன்குமார், தனது தந்தை செல்வராஜுடன் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். நவீன்குமாரின் தாயார் ஜோதி பாப்பிரெட்டிபட்டியில் தனியாக தங்கியிருந்தார்.
நேற்று அதிகாலையில் நவீன்குமாரும், செல்வராஜும் ஊருக்கு வந்தனர். வீட்டுக் கதவைத் தட்டியபோது அது திறக்கவில்லை. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அப்போது ஜோதியும், அவருக்கு அருகே மாதுவும் சேலையில் தூக்குப் போட்டு பிணமாக தொங்கியதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். பிணங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.
தனது வீட்டில் தனியாக வசித்து வந்த ஜோதியை, அவ்வப்போது வந்து பார்த்துள்ளார் மாது. நண்பரின் தாயார் என்ற வகையில் ஆரம்பத்தில் இவர்களது சந்திப்புகள் இருந்துள்ளன. பின்னர் இது தவறான பாதைக்குத் திரும்பி விட்டது. இருவரும் அடிக்கடி கள்ள நோக்கத்துடன் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த தகாத உறவு குறித்து மாதுவின் வீட்டுக்குத் தெரிய வந்து அதிர்ந்து போயினர். இதனால்தான் அவருக்கு வேகம் வேகமாக பெண் பார்த்து திருமணத்தை நிச்சயித்தனர். ஆனால் ஜோதியை விட்டுப் பிரிய மனமில்லாத மாது, வீட்டை விட்டு வெளியேறி ஜோதி வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் தங்களது முடிவை நாடி விட்டனர்.
பொருந்தாத உறவும், தகாத உறவும் கடைசியில் இப்படித்தான் ஆகும் என்பதற்கு மாது, ஜோதி இன்னும் ஒரு உதாரணமாகியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications