ஜெயலலிதாவின் எதிரிகள் பலமிழக்க வேண்டி கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் மகா சண்டி யாகம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் பிப்ரவரி 24ம் தேதி ஆகும். ஆனால் அவரது நட்சத்திரமான மகம் மார்ச் 7ம் தேதி வந்தது. பிறந்தநாளை விட நட்சத்திரம் வரும் அன்று பூஜைகள் செய்து வழிபட்டால் அதற்குரிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் தான் முதல்வர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதே வேளையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் கர்நாடக மாநிலம் கொல்லூர் தாய் மூகாம்பிகை ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், கஜ பூசை, மகா சண்டி யாகம் ஆகியவை குருக்கள் மூர்த்தி சா தலைமையில் நடைபெற்றன.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஆண்டுதோறும் புகழ்பெற்ற கோவில்களில் கொண்டாடும் வழக்கமுடையவர்கள் கரூர் ஜெயலலிதா பேரவை முன்னாள் மாவட்டச் செயலாளர் நாகராஜன் மற்றும் அதிமுக நிர்வாகி பாலாஜி சண்முகம். அவர்கள் இந்த ஆண்டு தங்கள் கட்சித் தலைவியின் பிறந்தநாளை கொல்லூர் தாய்மூகாம்பிகை கோவிலில் கொண்டாடியுள்ளனர்.
இந்த யாகம் குறித்து நாகராஜனிடம் கேட்டபோது, மகா சண்டியாகம் நடத்தினால் எதிரிகளின் பலம் குறையும், வெற்றி குவியும், ஆயுள்விருத்தி ஏற்படும். அம்மா நன்றாக இருந்தால் தான் தமிழகம் நன்றாக இருக்கும். அதனால் தான் அம்மாவுக்காக மகா சண்டியாகம் நடத்தினோம் என்றார்.












Click it and Unblock the Notifications