சங்கரன்கோவில் பிரசாரத்தில் அமைச்சர்கள் பங்கேற்க தடை கோரிய மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

உயர்நீதிமன்ற வக்கீல் மகாவீர சிவாஜி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளனர். இது தேர்தல் நன்னடத்தை விதிக்கு எதிரானதாகும்.
சங்கரன்கோவிலுக்குள் அமைச்சர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடியும் வரை அந்த தொகுதிக்குள் தமிழக அமைச்சர்கள் நுழையவும், தேர்தல் பிரச்சாரம் செய்யவும் , அங்கு தங்கவும் தடை விதிக்க வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications