அதிமுகவினரிடம் பணத்தை வாங்குங்க, திமுகவுக்கு ஓட்டுபோடுங்க: மு.க. அழகிரி
அதிமுகவின் கடந்த 9 மாத கால ஆட்சியில் மக்கள் தினந்தோறும் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்என்று திமுகவின் தேர்தல் பணி பொருப்பாளரும், தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிகளை கவனித்து வரும் அவர், தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
கடந்த தேர்தலில் தமிழக மக்கள் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, அதிமுகவுக்கு வாக்கு அளித்தனர். ஆனால் வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின்வெட்டு போன்றவைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் கடந்த 9 மாத கால ஆட்சியில் மக்கள் தினந்தோறும் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது, வேதனைகளை மக்கள் எங்களிடம் பகிர்ந்துகொள்கின்றனர்.
திமுக ஜெயிக்கும்
கிராமங்கள் தோறும் மக்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதிமுக பணம் கொடுத்தாலும் ஓட்டுக் கிடைக்காது என்றார். அப்படியே பணம் கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு திமுகவுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் சங்கரன்கோவில் தொகுதியில் தற்போது நிறைய மாற்றம் தெரிகிறது. இங்கே கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது. இந்த முறை தேர்தலில் 10 முதல் 15 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.












Click it and Unblock the Notifications