இந்தியா-இத்தாலி இடையேயான பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட உதவ தயார்: ஐரோப்பிய ஒன்றியம்
கோபன்ஹெகன்: தமிழக மீனவர்களை படுகொலை செய்த விவகாரத்தில் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு தீர்வு காண ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டென்மார்க்கின் ஹோபன்கெஹன் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார பொறுப்பாளர் காத்ரீன் ஆஸ்தன் கூறுகையில், இருநாட்டுக்கும் இடையேயான விவகாரத்தில் தீர்வு ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார்.
இது தொடர்பாக இத்தாலி அரசாங்கத்துடன் ஏற்கெனவே பேசியிருப்பதாகவும் தங்களால் முடிந்தவரை உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இருவரை கேரள கடற்பரப்பில் இத்தாலிய கப்பலில் இருந்த அந்நாட்டு கப்பல் படையினர் இருவர் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு இத்தாலிய படையினரை கேரள போலீசார் கைது செய்தனர். அரசு விருந்தினர் மாளிகையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications