சிமெண்ட் விலை உயரும் அபாயம்!

சிமெண்ட் மூட்டைகளை ரயிலில் ஏற்றிச் செல்வதற்கான சரக்கு கட்டணத்தை ரயில்வே வாரியம் திடீர் என்று 24 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் சிமெண்ட் விலை உயரும் என்று தெரிகிறது.
இது குறித்து சிமெண்ட் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
ஒரு மூட்டை சிமெண்ட்டை ரயிலில் எடுத்துச் செல்ல ரூ.15 அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு டன் சிமெண்ட்டுக்கு ரூ.300 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிமெண்ட் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை எடுத்துச் செல்லவும் இதே அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பலவித கட்டணங்களால் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெருக்கடியான காலங்களில் கூடுதலாக 10 சதவீதக் கட்டணம், ரயில்வே முனையங்கள் மற்றும் ரயில்வே மேம்பாட்டுக்கென கட்டணங்கள் தனித்தனியாக வசூலிக்கப்படுகின்றன.
சாலைப் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும். இல்லையெனில் சிமெண்ட் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications