2ஜி உரிமம் ரத்து: பிரதீபா பாட்டீலின் கருத்தைக் கேட்கும் முடிவு தள்ளிவைப்பு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கருத்தைக் கேட்கும் முடிவை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆ.ராசா மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. மேலும் ஏலம் மூலம் புதிய உரிமங்களை வழங்கவும் உத்தரவிட்டு அதற்கான காலக்கெடுவையும் நீதிமன்றம் நிர்ணயித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 122 2ஜி உரிமங்களை ரத்து செய்தது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு கடந்த 2ம் தேதி உச்சர நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறை தனது அதிகார எல்லையைத் தாண்டி அரசின் நிர்வாக முடிவில் தலையிடுவது போல் உள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்வாக ரீதியாக எடுக்கும் ஏதாவது முடிவை உச்சநீதிமன்றம் செல்லாது என்று கூறினால் பொது நலன் கருதி அரசியல் சாசனத்தின் 143வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் கேட்க முடியும்.
அவ்வாறு விளக்கம் கேட்பது குறித்து குடியரசுத் தலைவர் கருத்தை கேட்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.
அந்த கூட்டத்தில் 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எழுந்துள்ள பிரச்சனைகள், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீட்டைக் கோருவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் பிரதீபா பாட்டீலின் கருத்தைக் கேட்பது குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கும் முன்பு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தைக் கேட்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அடுத்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடக்கும் என்றும் கூறப்படுகின்றது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications