வருடா வருடம் இந்திய என்ஜிஓக்களுக்குப் பாய்ந்து வரும் ரூ. 10,000 கோடி நிதி!

கடந்த 2009-10ம் ஆண்டு இந்திய தொண்டு நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதியுதவியை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22,000 தொண்டு நிறுவனங்கள் இந்த வெளிநாட்டு உதவியைப் பெற்றுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவை 3218 ஆகும் என்று அத்தகவல் தெரிவிக்கிறது.
தமிழக நிறுவனங்கள் மட்டும் கடந்த 2009-10ல் ரூ. 1663.31 கோடி நிதியைப் பெற்றுள்ளன. இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளது.
தற்போது கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதியை தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து 12 தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இவற்றின் நிதிப் பரிமாற்றம், செலவு உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆய்வு நடந்து வருகிறது. இதில் நான்கு நிறுவனங்கள் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தொண்டு நிறுவனங்கள்தான் அதிக அளவிலான நிதியைப் பெற்றுள்ளன. அதாவது ரூ. 1815.91 கோடியைப் பெற்றுள்ளன. அடுத்த இடம் தமிழகத்திற்கு. ஆந்திராவில் உள்ள நிறுவனங்கள் ரூ. 1324.87 கோடி நிதியைப் பெற்றுள்ளன.
இந்தியாவிலேயே அதிக அளவிலான நிதியைப் பெற்ற மாவட்டம் சென்னைதான். இந்த மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 871.60 கோடி அந்நிய நிதி வந்துள்ளது. அடுத்த இடம் பெங்களூருக்கு. அந்த மாவட்டம் ரூ. 702.43 கோடி நிதியைப் பெற்றுள்ளது. மும்பை 606.63 கோடியைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு அதிக நிதியை அளிக்கும் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேர்ல்ட் விஷன் இந்தியா நிறுவனம்தான் கடந்த 2009-10ல் அதிக அளவிலான நிதியை வாங்கியுள்ளது. அதாவது ரூ. 208.94 கோடி நிதியை அது வாங்கியுள்ளது.
தாங்கள் பெற்ற நிதியில் பெரும்பாலானவற்றை, அதாவது ரூ. 1482.58 கோடியை நிறுவன செலவுகளுக்காகவே பெரும்பாலான நிறுவனங்கள் செலவிட்டுள்ளன. ரூ. 944.13 கோடியை ஊரக வளர்ச்சிக்காகவும், சிறார் நலனுக்காக ரூ. 742.42 கோடியையும் அவை செலவிட்டுள்ளன.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications