திருச்சி கல்லூரியில் பேச வந்த சிங்களப் பேராசிரியை-கடும் எதிர்ப்பால் வெளியேற்றம்
திருச்சி: நெல்லைக்கு சிங்களப் பேராசிரியை ஒருவர் சமீபத்தில் வந்து கடும் எதிர்ப்பால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மேலும் ஒரு சிங்களப் பேராசிரியை தமிழகத்திற்கு வந்து தமிழ் அமைப்புகளின் போராட்டத்தால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்களப் பேராசிரியை சமீபத்தில் நெல்லையில் நடந்த மனோன்மணியம் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டார். அப்போது தமிழ்ப் பெண்ளை இலங்கையில் யாரும் பலாத்காரம் செய்யவில்லை, சீரழிக்கவில்லை என்று அவர் பேசினார். இதற்கு நாம் தமிழர், மதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர் பல்கலைக்கழகத்திலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் இன்னொரு சிங்களப் பேராசிரியையும் தமிழகத்திற்கு வந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின், நிர்வாகப் படிப்புப் பிரிவு தலைவராக உள்ளவர் பேராசிரியை ஹேமமாலி குணதிலகே. இவர் இன்று திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரிக்கு வந்தார்.
அங்கு நடந்த கருத்தரங்கில் அவர் பேசினார். இதை அறிந்த விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர். ஹேமமாலிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தில் ஹேமமாலியை பின்பக்கமாக வெளியேற்றி வைத்தனர்.
பின்னர் வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications