ராத்திரி 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக விஜயகாந்த், பிரேமலதா மீது வழக்கு!

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி இரவு பத்து மணிக்கு மேல் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் பிரசாரம் செய்தார்கள் என்று கூறி அதிமுக நகர செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சங்கரன்கோவிலில் நேற்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் பிரசாரத்தைத் தொடங்கினர். முதலில் சங்கரநயினார் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்ட இருவரும் பின்னர் வெளியே வந்து கோவிலுக்கு அருகே வேனில் இருந்தபடி பிரசாரத்தைத் தொடங்கினர்.

பின்னர் இருவரும் தனித் தனி வேன்களில் பிரிந்து சென்று பிரசாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் தேர்தல் விதிமுறையை மீறி இரவு பத்து மணிக்கு மேல் இருவரும் பிரசாரம் செய்ததாக சங்கரன்கோவில் அதிமுக நகரச் செயலாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து டவுன் போலீஸார் இருவர் மீ்தும் வழக்குப் போட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+