'மாப்ள, கோழி பிரியாணியா முட்டை பிரியாணியா'.. கலகலக்க வைத்த விஜயகாந்த்!

சங்கரன்கோவிலில் நேற்று பிரசாரத்தைத் தொடங்கினார் விஜயகாந்த். அவரும், மனைவி பிரேமலதாவும், சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு சன்னிதிக்கு முன்பாகவே பிரசாரத்தைத் தொடங்கினார்.
விஜயகாந்த் வழக்கம் போல ஜாலியாக பேசினார். நிறுத்தி நிதானமாக அவர் பேசிய பேச்சை கூடியிருந்தோர் ரசித்துக் கேட்டனர். தனது ஸ்டைலில் அவர் பேசுகையில், சங்கரன்கோவிலில் முகாமிட்டுள்ள அமைச்சர்களை கிண்டலடிக்கவும் தவறவில்லை.
அவர் அமைச்சர்கள் குறித்துக் கூறுகையில், 32 அமைச்சர்கள் வந்துள்ளனர். வாக்காளர்கள் வீட்டிற்கு சென்று மாப்ள, மதினி என முறை வைத்து பேசுகின்றனர். ஒரு ஆஃப் வாங்கி குடிங்க மாப்ள, கோழி பிரியாணி வேணுமா? முட்டை பிரியாணி வேணுமான்னு கேட்கின்றனர். மதினியாரே உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கின்றனர் என்று அவர் நக்கலாக பேசியபோது கூட்டத்தினர் மத்தியில் கொல்லென சிரிப்பலை எழுந்து அடங்கியது.












Click it and Unblock the Notifications