ரயில்வே பட்ஜெட்: எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறுமா?

Subscribe to Oneindia Tamil

Train
டெல்லி: நாளை மத்திய ரயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. டிக்கெட் கட்டணம் உயரலாம் என்று கூறப்பட்டு வருவதால், இந்த முறை பட்ஜெட் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2012-2013-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி நாளை சமர்ப்பிக்கவிருக்கிறார்.

இந்த பட்ஜெட்டை மக்களை விட ஆவலாக இன்னும் சிலரும் எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள், சரக்கு ஏற்றிச் செல்லும் வேகன்களைத் தயாரிப்பவர்கள்தான். டிடாகர் வேகன்ஸ், டெக்ஸ்மேகா போன்ற நிறுவனங்கள் இந்த முறை தங்களுக்கு பல்க் ஆர்டர் கிடைக்கும் என காத்திருக்கின்றனர்.

ஏற்கெனவே நிலக்கரி போன்ற பொருள்களின் சரக்குக் கட்டணத்தை 35 சதவீதம் வரை ரயில்வே அமைச்சகம் உயர்த்திவிட்டதால், இந்தக் கட்டணம் மேற்கொண்டு உயருமா அல்லது பயணிகள் கட்டணத்தில் இந்த முறை கைவைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் அடுத்த நிதியாண்டில் ரூ 15000 கோடி முதல் ரூ 30000 கோடி வரை நிதி திரட்டுவது திட்டமாகக் கொண்டுள்ளது உள்ளது மத்திய ரயில்வே.

இரண்டாம் வகுப்புக் கட்டணங்களை உயர்த்தாவிட்டாலும், முதல் வகுப்பு ஏசி கட்டணங்களை கணிசமாக உயர்த்தும் திட்டத்திலிருக்கிறது ரயில்வே அமைச்சகம் என்று கூறப்படுகிறது.

திரிணாமூல் காங்கிரஸ் வசம் ரயில்வே இருப்பதாலோ என்னமோ பெரும்பாலான திட்டங்கள் மேற்கு வங்கத்துக்கே போகின்றன. இந்த முறையாவது தென் மாநிலங்களுக்கு போதிய அளவு ரயில்வே திட்டங்கள் ஒதுக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் தமிழகத்துக்கான பல திட்டங்கள் போதிய நிதியின்றி முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட் அமையுமா... பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+