2ம் வகுப்பு முதல் ஏசி வரை எல்லா ரயில் கட்டணமும் உயர்வு: பிளாட்பார்ம் கட்டணமும் அதிகரிப்பு

2012-13ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டை திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இன்று தாக்கல் செய்தார்.
இதில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் ரயில் கட்டணங்கள் முதன் முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. பிளாட்பார்ம் கட்டணமும் ரூ. 3ல் இருந்து ரூ. 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண 2ம் வகுப்புக் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 5 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏசி சேர் கார், ஏசி 3 டயர் மற்றும் முதல் வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
ஏசி 2 டயரில் கிலோமீட்டருக்கு 15 பைசாவும், ஏசி முதல் வகுப்புக் கட்டணம் கிலோமீட்டருக்கு 30 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன.
300 கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்துக்கான கட்டணம் ரூ. 12 அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications