இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடப்படும்!
Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 16ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த தேர்தலை முறையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரும் 16ம் தேதி மாலை 5 மணி முதல் 18ம் தேதி இரவு வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 21ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும்மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபாட்டில்கள் கடத்தல், பதுக்கல், சட்ட விரோதமாக விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications