சுமங்கலி திட்டத்தின்கீழ் 2 லட்சம் பெண் கொத்தடிமைகள்: ஜேம்ஸ்விக்டர்
சிவகங்கை: சுமங்கலித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாலைகளில் பணிபுரியும் 2 லட்சம் இளம் பெண்கள் கொத்தடிமைகளாக உள்ளதாக திருப்பூர் மக்கள் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் ஜேம்ஸ்விக்டர் தெரிவித்துள்ளார்.
சுமங்கலி திட்டம் குறித்த கருத்தரங்கம் சிவகங்கையில் நடந்தது. இக்கருத்தரங்கில் திருப்பூர் மக்கள் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் ஜேம்ஸ்விக்டர் கலந்து கொண்டு பேசியதாவது,
தமிழக கிராமங்களில் வறுமையால் வாடும் இளம் பெண்களின் பட்டியலை பஞ்சாலை முதலாளிகள் தயாரித்து தரகர்கள் மூலம் அவர்களின் குடும்பத்தினரை அணுகுகின்றனர். பெற்றோரிடம் சுமங்கலி திட்டம் குறித்து பேசி 3 வருட முடிவில் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை தருவதாக ஒப்பந்தம் போட்டு இளம்பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். ஆனால் 3 வருட முடிவில் பேசியபடி பணம் கொடுப்பதில்லை. இது போன்று தமிழகம் முழுவதும் 2 லட்சம் இளம் பெண்கள் சுமங்கலி திட்டத்தில் பணிபுரிகிறார்கள்.
5 பேர் இருக்கிற அறையில் 20 பேரை தங்க வைக்கின்றனர். பாலியல் தொந்தரவு செய்கின்றனர். குறிப்பாக தொழிலாளர் நலச் சட்டங்களை பின்பற்றுவதே இல்லை.
ஒரு தொழிற்சாலையில் மொத்த தொழிலாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அப்ரண்டிஸ் தொழிலாளர்களாக இருக்க வேண்டும் என்பது தொழிலாளர் நலச் சட்டமாகும். ஆனால் 100 சதவீத தொழிலாளர்களும், குறிப்பாக இளம் பெண்கள் அப்ரண்டிஸ்களாக வேலை செய்து வரும் நிலை தொடர்கின்றது. தொழிலாளர் ஆய்வாளர்களும் இதனை கண்டு கொள்வதே இல்லை. வேலை செய்கிற இளம் பெண்களின் பெயர்களை மாற்றி பதிவு செய்து வேலை வாங்குகிறார்கள்.
தமிழக அரசு இளம் பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வறுமையால் வதைபடும் பெண்கள் அனைவருக்கும் திருமண உதவித் திட்டத்தை தமிழக அரசு விரிவாக்கம் செய்திட வேண்டும். பஞ்சாலைகளில் வேலை செய்கிற இளம் பெண்களுக்கு தொழிலாளர் நலச்சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications