மராட்டியத்தில் ரூ118 கோடி சொத்து குவித்த '"டெபுடி கலெக்டர்"
Subscribe to Oneindia Tamil
அலிபாக்: மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்த நிதிஷ் ஜனார்த்தன் தாக்கூர் கணக்கில்காட்டாத ரூ118 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1988 முதல் 2010ஆம் ஆண்டு வரை துணை ஆட்சியராக பொறுப்பு வகித்தார் தாக்கூர். அவர் மீதான ஊழல் புகார்களைத் தொடர்ந்து அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தாக்கூர் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 26 இடங்களில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அலிபா, கண்டிவாளி, பொரிவாலி உள்ளிட்ட மும்பை புறநகர் பகுதிகளில் இச்சோதனை நடைபெற்றது.
தாக்கூர், அவரது ம்னைவி, தாயார் மற்றும் தம்பி ஆகியோரை அலிபாக் போலீஸார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications