மார்ச் 30 வரை தினேஷ் திவேதி ரயில்வே அமைச்சராக நீடிப்பார்?
டெல்லி: பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்திய சர்ச்சையில் தலை உருளும் தினேஷ் திவேதி மார்ச் 30-ந் தேதி வரை ரயில்வே அமைச்சராக நீடிக்கட்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜியிடம் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்ற மமதா பானர்ஜி தாம் வகித்து வந்த ரயில்வே அமைச்சர் பொறுப்புக்கு தினேஷ் திவேதியை பரிந்துரை செய்தார்.
தினேஷ் திவேதியும் தமது முதலாவது ரயில்வே பட்ஜெட்டை பயணிகள் கட்டணம் உயர்வு என்ற அறிவிப்புடன் தாக்கல் செய்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த மமதா பானர்ஜி திவேதியை உடனே நீக்கிவிட்டு தமது கட்சியின் முகுல்ராயை ரயில்வே அமைச்சராக்க வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் அமளியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று காலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் தினேஷ் திவேதியும் கலந்து கொண்டார்
தினேஷ் திவேதியை மார்ச் 30-ந் தேதிக்குப் பிறகு மாற்றலாம் என்று மமதாவை காங்கிரஸ் கட்சி சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்தே
அவர் அமைச்சராக நீடித்து வருவதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications