கூடங்குளம் 6 அணு உலைகள் மூலம் 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் 3, 4 அணு உலைகளை பொருத்தவரை முன்னேற்பாடு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த 2005ம் ஆண்டு நடந்து முடிந்தது. மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தின் அனுமதி 3 மற்றும் 4 அணு உலைகளுக்கு 2009ம் ஆண்டும், 5 மற்றும் 6 உலைகளுக்கு 2010ம் ஆண்டும் ஏற்கனவே கிடைத்துள்ளது. அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விஞ்ஞானபூர்வமான அனுமதியும் 3,4,5,6 அணு உலைகளுக்கு பெறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டத்தை பொறுத்தவரை கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான அனுமதி அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திடம் இருந்தும், நிதி ஒதுக்கீடு மத்திய அரசிடம் இருந்தும் பெற வேண்டும். 3,4 அணு உலைக்களுக்கான திட்ட மதிப்பிட்டை தயாரித்து வருகிறோம். 15 ஆயிரம் கோடி செலவாகும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் வருங்காலத்தில்
கூடங்குளத்தில் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றார்.