இலங்கைக்கு எதிராகப் பேசிய பத்திரிகையாளர்களுக்கு அடி உதைதான் - மெர்வின் சில்வா
கொழும்பு: இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் கருத்து தெரிவித்துவிட்டு நாட்டுக்குள் காலடி வைத்தால் அவர்களின் கை, கால்களை உடைத்துவிடுவேன் என்று இலங்கையின் ரவுடி அமைச்சர் என்று பெயரெடுத்தவரான மிர்வின் சில்வா மிரட்டல் விடுத்துள்ளார்.
கிரிபத்கொடை என்ற இடத்தில் ஐ.நா.தீர்மானத்துக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மிர்வின் சில்வா பேசியதாவது:
போத்தல ஜயந்த என்னும் ஊடகவியலாளரை நான் தான் இலங்கையிலிருந்து விரட்டியடித்தேன். இத்தகைய ஊடகவியலாளர்கள் நாட்டுக்குள் கால்பதித்தால் அவர்களின் கை, கால்கள் அடித்து உடைக்கப்படும்.
எங்கிருந்து சுனாமி வந்தாலும் ராஜபக்சவிடமிருந்து எனக்கெதிராகச் சுனாமி வராது. என்னை அவர்மட்டுமே பதவியிலிருந்து விலக்க முடியும்.
இப்போதுள்ள ராஜபக்சே சகோதரர்களை அவர்கள் சிறுபிள்ளைகளாக இருந்த காலத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அவர்கள் இந்த நாட்டின் "மன்னர்கள்". அந்த மன்னர்கள் என்னை நம்புவர்.
எனக்கு எதுவும் நடந்துவிடும் என்று நான் கவலைப்படவில்லை. எனக்குப் பின்னால் என் மகனை இந்த நாட்டுக்காக இன்று முதல் ஒப்படைக்கிறேன்.












Click it and Unblock the Notifications