சிபிஐ அதிகாரி என கூறி பணம் பறித்த முன்னாள் ரவுடிகள் கைது – பணம் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் சி.பி.ஐ. அதிகாரிகள் எனக் கூறி பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் ரூ 54 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை திடீர் நகரைச் சேர்ந்தவர் ரவுடி ஹரிகிருஷ்ணன்(42). இவர் மீது மோசடி வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இவரும், ஆட்டோ டிரைவர் ஒருவரும் சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் அருகே, ஒருவரை மிரட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த தனிப்படை எஸ்.ஐ. தியாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, நாகராஜன் ஆகியோர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது விருதுநகர் சிவந்திபுரம் பேத்தரசிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் எனக் கூறி, ரூ.44 ஆயிரத்தை பறித்தது தெரிந்தது. மேலூர் மிக்சர் கடை மாஸ்டர் கண்ணனிடம், எஸ்.ஐ. எனக் கூறி ரூ.10 ஆயிரத்தை பறித்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஹரிகிருஷ்ணன், ஆட்டோ டிரைவர் கணபதி, ஹார்விநகர் ராஜாதேசிங்கு, ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.54 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+