தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்!

Subscribe to Oneindia Tamil

தென் கொரியாவைச் சேர்ந்த வங்கி தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான ஹையோசங் டிஎன்எஸ் (Hyosung TNS), தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான ஏடிஎம் (ATM) இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்காக அமைக்கப்பட உள்ளது. ஏடிஎம் இயந்திரம் தயாரிப்பில் வன்பொருள் டிசைனிங் முதல் சாப்ட்வேர் சேவை பலதரப்பட்ட பணிகள் இருக்கும் காரணத்தால் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாகும்.

Hyosung TNS Tamil Nadu ATM manufacturing plant Tamil Nadu Minister Keerthana Hyosung Tamil Nadu industrial investment Hyosung TNS ATM factory Tamil Nadu South Korea investment ATM production Tamil Nadu Keerthana South Korea visit Tamil Nadu manufacturing hub Hyosung TNS Greenfield project

அமைச்சர் கீர்த்தனாவின் அறிவிப்பு

தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் கீர்த்தனா இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் தொழில் சூழலை வலுப்படுத்துவதுடன், உலகளாவிய நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தென் கொரியாவில் நடந்த சந்திப்பு

அமைச்சர் கீர்த்தனா, தென் கொரியா பயணத்தின்போது ஹையோசங் டிஎன்எஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் மேம்பட்ட தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் விளைவாகவே, ஹையோசங் டிஎன்எஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஹையோசங் டிஎன்எஸ் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேர்வு செய்வது, மாநிலத்தின் தொழில் சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதை உறுதிப்படுத்துகிறது.

இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம், உள்ளூர் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மேலும் விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, இதுபோன்ற முதலீட்டு திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

ஹெச்டி ஹூண்டாய்

தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, சமீபத்தில் தென் கொரியா பயணத்தின்போது HD ஹூண்டாய் நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளை நேரில் சந்தித்து விவாதித்தார். இந்த சந்திப்பில், தமிழ்நாட்டில் மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தென் கொரியாவின் முன்னணி நிறுவனமான எச்.டி. ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HD Hyundai Heavy Industries) பங்களிப்புடன், தூத்துக்குடியில் இந்தியாவின் முதலாவது மாபெரும் பசுமைக்காடு கப்பல் கட்டும் தளம் (Mega Greenfield Shipyard) அமைக்கப்படவுள்ளது. சுமார் 4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹33,000 கோடி முதல் ₹40,000 கோடி வரை) மதிப்பீட்டில் உருவாகும் இந்த மெகா உள்கட்டமைப்பு திட்டம், தமிழகத்தின் தொழில் துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+