தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்!
தென் கொரியாவைச் சேர்ந்த வங்கி தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான ஹையோசங் டிஎன்எஸ் (Hyosung TNS), தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான ஏடிஎம் (ATM) இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்காக அமைக்கப்பட உள்ளது. ஏடிஎம் இயந்திரம் தயாரிப்பில் வன்பொருள் டிசைனிங் முதல் சாப்ட்வேர் சேவை பலதரப்பட்ட பணிகள் இருக்கும் காரணத்தால் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாகும்.

அமைச்சர் கீர்த்தனாவின் அறிவிப்பு
தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் கீர்த்தனா இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் தொழில் சூழலை வலுப்படுத்துவதுடன், உலகளாவிய நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தென் கொரியாவில் நடந்த சந்திப்பு
அமைச்சர் கீர்த்தனா, தென் கொரியா பயணத்தின்போது ஹையோசங் டிஎன்எஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் மேம்பட்ட தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் விளைவாகவே, ஹையோசங் டிஎன்எஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஹையோசங் டிஎன்எஸ் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேர்வு செய்வது, மாநிலத்தின் தொழில் சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதை உறுதிப்படுத்துகிறது.
இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம், உள்ளூர் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மேலும் விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, இதுபோன்ற முதலீட்டு திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
ஹெச்டி ஹூண்டாய்
தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, சமீபத்தில் தென் கொரியா பயணத்தின்போது HD ஹூண்டாய் நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளை நேரில் சந்தித்து விவாதித்தார். இந்த சந்திப்பில், தமிழ்நாட்டில் மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தென் கொரியாவின் முன்னணி நிறுவனமான எச்.டி. ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HD Hyundai Heavy Industries) பங்களிப்புடன், தூத்துக்குடியில் இந்தியாவின் முதலாவது மாபெரும் பசுமைக்காடு கப்பல் கட்டும் தளம் (Mega Greenfield Shipyard) அமைக்கப்படவுள்ளது. சுமார் 4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹33,000 கோடி முதல் ₹40,000 கோடி வரை) மதிப்பீட்டில் உருவாகும் இந்த மெகா உள்கட்டமைப்பு திட்டம், தமிழகத்தின் தொழில் துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!












Click it and Unblock the Notifications